காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான மனுவை விசாரணை செய்வதிலிருந்து நீதவான் விலகியுள்ளார்!

Date:

காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஏனைய சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, இரு தரப்பினரும் சமர்ப்பித்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், அவ்வாறான கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து விலக தீர்மானித்ததுடன், கோரிக்கையை வேறொரு நீதவானிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...