சனத் நிஷாந்த-மிலன் ஜயதிலக்க விசேட பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தனர்!

Date:

கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விசேட பாதுகாப்புடன் சிறையிலிருந்து இன்று (20) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இருவரும் பாராளுமன்ற அறையில் இருந்ததை காணமுடிந்தது. இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (19) பணிப்புரை விடுக்கப்பட்டதாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இருவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றும் (20) பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் இருந்தனர்.
சம்பவ இடத்தில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவ அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...