சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் பதற்றம்!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.

நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை உறுப்பினர்கள் நம்பிக்கையில்ல பிரேரணை மீது விவாதம் செய்வதற்கான திகதியை வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பதவி நீக்க பிரேரணைக்கு இல்லை என்றும் கூறினர்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...