நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

Date:

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிங்கள ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இது தொடர்பில் நாளை விரிவாக கலந்துரையாடப்படும், எனவும் நாட்டின் பிரச்சினை மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அத்தோடு நாளை நடைபெறும் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சார்ஜன்டை தாக்கி செங்கோலை பறிக்க முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் பிரதமர் அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...