புதிய அரசாங்கத்தை அமைக்க தயார்: ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நிபந்தனைகள்!

Date:

புதிய அரசாங்கத்தை அமைக்க 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் கடினமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உரிய விடயங்களுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முதலாவதாக, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்., இரண்டாவதாக, புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது, மூன்றாவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், கடைசியாக, பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...