அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சர்களும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கிய பாரிய வரிச்சலுகை குறித்தும், நாட்டுக்கு போதிய வருமானம் கிடைக்காதது சரியான முடிவா? என்ற கேள்விக்கு,
‘இல்லை. அது சரியான முடிவு அல்ல என்று நினைக்கிறேன். ஆனால் உள்ளூர் வணிக நிறுவனங்கள் அந்தப் பணத்தை மீண்டும் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதை உறுதி செய்ய ஜனாதிபதியால் அந்த நேரத்தில் சரியான நோக்கத்துடன் தீர்மானம் எடுக்கப்பட்டது, ‘எனவே, நோக்கம் அதுதான், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அவர் நினைத்த வழியில் செல்லவில்லை.’
அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தில் இந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என தான் எதிர்பார்த்ததாக நாமல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லவும், ரூபாய் பெறுமதி தொடர்பாக பரிந்துரைத்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை அரசாங்கம் ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்விக்கு, அது முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளிடமும் செல்கிறது, ஏனெனில் அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.
‘அரசாங்கம் அல்லது நிதியமைச்சர் மற்றும் செயலாளர் குறிப்பாக சில அதிகாரிகள் அவருக்கு வழங்கிய ஆலோசனையின் படி செயல்பட்டனர். மேலும், தற்போதைய நிதியமைச்சர், நாடாளுமன்றத்தில், சில அதிகாரிகள் தவறான அறிவுரைகளை வழங்கினர் என்பதை ஒப்புக்கொள்கிறார்,’ என்று அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன கூறுவார் என்ற கேள்விக்கு ‘நாம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை, அதாவது அரசியல்வாதிகளாகிய நாம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் வல்லவர்கள். ஆனால் அது உண்மையில் பிரச்சினைகளை தீர்க்குமா? அது அவர்களுக்கு மூன்று வேளை உணவு தருமா?’
பொறுப்பு உள்ளது மற்றும் பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் நாம் முன்னோக்கி செல்லும் வழியையும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், ‘ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் உட்பட எந்த அரசியல்வாதியும் பாராளுமன்றத்தில் முன்னோக்கி செல்லும் வழி பற்றி பேசுவதை நான் காணவில்லை,’
அதே சமயம், முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்கள் எதிர்காலத்தைப் பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அடுத்த தலைமுறையினர் அதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று ராஜபக்ச கூறினார்.
‘நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். எனவே, சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன் அதுதான் இந்த நெருக்கடியிலிருந்து எம்மை மீட்டுக்கொள்ளமுடியும் என நாமல் ராஜபக்ஷ நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.