ஹர்த்தாலில் இணையும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?: ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

Date:

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே 2022 சம்பளம் குறைக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கடித முறைமையினை பயன்படுத்தி பேஸ்புக்கில் பரப்பப்படும் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி செயலகம் அவ்வாறானதொரு அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சுக்கு வழங்கவில்லை எனவும், இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...