மன்னாரில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கோட்டா கோ கம’ என்ற அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றாலை மின் திட்டம் நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார் என்று ஜனாதிபதி கோட்டாபய தனக்குத் தெரிவித்ததாக,இலங்கை மின்சார சபையின் தலைவர் சி பெர்டினாண்டோ, நாடாளுமன்றக் குழு முன்னால் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, 2022 ஜூன் 14 அன்று பதவி விலகினார்.
இந்தநிலையிலேயே இலங்கைக்கும் இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி முன்னால் ஆரம்பித்த பேரணி, மின்சார சபைக்கு முன் வந்த பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.