இலங்கைக்கு பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டீசலின் வரையறுக்கப்பட்ட முறையில் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று ஜூன் 23 அதிகாலையில் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வந்து சேரும் என   அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன் வருகை இப்போது தாமதமாகியுள்ளது.  எனவே ஜூன் 24 வெள்ளிக்கிழமை கொழும்பில் பெட்ரோல் கப்பல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டாலும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளை காணமுடிந்தது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...