பொருளாதார நெருக்கடிகள் நீங்க தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்க நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்று கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க கடந்த 26ம் திகதி பள்ளிவாசலுக்கு வருகை தந்து மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அனைத்து இன, மத மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையை, தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சம-தலைவர்  அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நிகழ்த்தினார்,

இதனையடுத்து தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் சாலி, பள்ளிவாசல் சார்பாக, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி விஷேட நினைவு சின்னமொன்றை வழங்கி வைத்தார்,

இவ்வைபவத்தில் உலமாக்கள், தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள், அகில இலங்கை சூபி தரீக்கா உயர்பீட உறுப்பினர்கள் உற்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...