பொருளாதார நெருக்கடிகள் நீங்க தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்க நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்று கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க கடந்த 26ம் திகதி பள்ளிவாசலுக்கு வருகை தந்து மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அனைத்து இன, மத மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையை, தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சம-தலைவர்  அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நிகழ்த்தினார்,

இதனையடுத்து தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் சாலி, பள்ளிவாசல் சார்பாக, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி விஷேட நினைவு சின்னமொன்றை வழங்கி வைத்தார்,

இவ்வைபவத்தில் உலமாக்கள், தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள், அகில இலங்கை சூபி தரீக்கா உயர்பீட உறுப்பினர்கள் உற்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...