‘பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களே மீண்டும் பதவியேற்பதால் நாடு மேலும் படுகுழியில்’: முஜிபுர் ரஹ்மான்

Date:

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு பிரதமர் தலைமையிலான குழுவொன்று நாட்டின் பொறுப்புக்களை ஏற்க முன்வந்தாலும், பழைய பழக்கங்களை உடைத்தவர்களே நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டு மக்களிடமிருந்தோ அல்லது சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கோ எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...