மாணவர்களின் கல்விச் சிக்கல்களைத் தீர்க்க விசேட குழு: டலஸ்

Date:

மாணவர்களின் கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் (21) ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது, ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்று போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி, 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சமூக-அரசியல் பேரழிவினால் இலங்கைப் பிள்ளைகளின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படும் என்று சபை நம்புவதாக  டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கல்வி இழப்பு மற்றும் நேர இழப்பு போன்றவற்றால் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்பள்ளிப் பிள்ளைகள் கூட மிகவும் உணர்திறன் மிக்க தீர்வைக் காண்பது பெரியவர்களின் பொறுப்பாகும் என்று அழகப்பெரும கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...