‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’: பிரதமர் இல்லத்து அருகில் ஹிருணிகா தலைமையில் பெண்கள் போரராட்டம்

Date:

கொழும்பில் ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

‘ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது’ எனவும் தெரிவித்து குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திற்குச் சென்றதால் தர்ஸ்டன் கல்லூரி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களும் ஹிருணிகாவும், ‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’ என்று கோரி தரையில் அமர்ந்து கொண்டதாகவும் அதுவரை அசையப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூடுதல் பாதுகாப்புடன் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் தற்போது தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...