இந்தியாவிடம் இருந்து புதிய உதவிகள்: இந்திய உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது!

Date:

இலங்கைக்கான மேலதிக நிதியுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இன்று இலங்கைக்கு வந்துள்ளது.

அதற்கமைய இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவத்ரா,  பொருளாதார இந்திய பொருளாதார விவகார செயலாளர் – அஜய் சேத், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர். வி.ஆனந்த நாகேஸ்வரன் உட்பட நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் இந்த குழு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியக் கடன் வரியின் கீழ் அண்மையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்ற போதிலும், இந்தியாவிடம் இருந்து புதிய உதவிகளை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை, சீனா, இந்தியா மற்றும் ஜப்பானை நன்கொடையாளர் மாநாட்டிற்கு அழைத்து அதிக வெளிநாட்டு உதவிகளை வழங்குவதுடன், ஆகஸ்ட் மாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என்று பிரதமர் விக்கிரமசிங்க நேற்று (ஜூன் 22), சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...