‘இந்திய அரசின் மேலதிக உதவிகளைப் பற்றி ஆலோசிக்க அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்’: பிரதமர்

Date:

இலங்கை ஏற்கனவே இந்திய கடன் வரி மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துள்ள நிலையில், இலங்கைக்கான எதிர்கால உதவிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஜூன் 23 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்போது, ‘அவர்கள் ஏற்கனவே நிறைய செய்திருப்பதால், அவர்களுக்கென்று வரம்புகள் இருப்பதால், இந்தியாவிடம் கூடுதல் உதவியை நாங்கள் கோர முடியாது.

அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நம்பியிருப்பதுதான் இப்போது முன்னோக்கி செல்லும் ஒரே வழி,’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...