‘இலங்கை மூழ்கும் கப்பல் என்று நான் நினைக்கவில்லை’: தம்மிக்க பெரேரா

Date:

புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தனது சொத்துப் பிரகடனம் மற்றும் வரி அனுமதிச் சான்றிதழை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

‘இதுபோன்ற சவாலான காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது, மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

இது மூழ்கும் கப்பல் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் வேகமாக ஆடும் கப்பல். யாரும் மூழ்கும் கப்பலில் ஏற வேண்டாம் என தம்மிக்க பெரேரா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நான் இந்த பதவிக்கு வந்தது இந்த நாட்டுக்கு ஏதாவது நன்மையை செய்யவே, பிரச்சினை இருப்பதாலதான் நான் வந்தேன் தற்போது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி செய்யவுள்ளேன். அதற்கான கடமைகள் உள்ளன. அதை வெற்றிகரமான செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனக்கு சிறந்ததொரு அமைச்சு பதவியை வழங்குவார்கள் எனவும் அதற்கமைய அதை எந்த முறையிலும் சிறப்பாக செய்து நாட்டை முன்னேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...