கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான சூழல்: கைதி ஒருவர் பலி: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!

Date:

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மோதலுக்கு மத்தியில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் என்பது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு நிறுவனமாகும், இது நீதி அமைச்சின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தால் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...