கோட்டைக்கு அருகில் பயணிக்கவிடாமல் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

Date:

கொழும்பு கோட்டை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நடாத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதிலிகே மாவத்தையில் உள்ள வங்கிக்கு தானும் மேலும் மூன்று பெண்களும் செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீதியை மறித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை காண வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்லும் வீதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை  சமூக ஊடகத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர அதே வீதியில் அமைந்துள்ள ஒரு வங்கிக்கு வந்ததாகக்  பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொலிசார் உடனடியாக தடுப்புகளை வைத்து, பொது மக்களுக்கு திறந்திருந்த போதும், சாலைக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தன்னை நுழைய விடாமல் பொலிசார் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...