ஜனாதிபதி அலுவலகம் அருகே பதற்றமான நிலை: போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

Date:

இன்று காலை கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிசார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கொட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்ததன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, லோட்டஸ் சாலையை வாகன போக்குவரத்துக்கு திறந்துவிட்டனர்.

இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கலைந்து சென்றுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...