திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தம்: :தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Date:

தனியார் பேருந்துகளுக்கு போதியளவு டீசல் வழங்கப்படாததால், திங்கட்கிழமை (6) முதல் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கையிலே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும், முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கட்கிழமை முதல் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படும் என தெரிவித்த போதிலும் அதற்கான உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட நாள் கணக்கில் வரிசைகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...