பாடசாலை சிறுவர்களின் உணவுத் தேவைக்காக சீனாவிலிருந்து அரிசி அன்பளிப்பு!

Date:

இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆறு மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு புத்தாண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...