பாடசாலை சிறுவர்களின் உணவுத் தேவைக்காக சீனாவிலிருந்து அரிசி அன்பளிப்பு!

Date:

இலங்கையின் கல்வி அமைச்சுக்கு 1,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைச் சிறார்களுக்கு விநியோகிப்பதற்காக 44 கொள்கலன்களில் குறித்த அரிசித் தொகை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆறு மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு புத்தாண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...