பொருளாதார நெருக்கடிகள் நீங்க தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்க நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்று கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க கடந்த 26ம் திகதி பள்ளிவாசலுக்கு வருகை தந்து மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அனைத்து இன, மத மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையை, தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சம-தலைவர்  அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நிகழ்த்தினார்,

இதனையடுத்து தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ரியாஸ் சாலி, பள்ளிவாசல் சார்பாக, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி விஷேட நினைவு சின்னமொன்றை வழங்கி வைத்தார்,

இவ்வைபவத்தில் உலமாக்கள், தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபையினர்கள், அகில இலங்கை சூபி தரீக்கா உயர்பீட உறுப்பினர்கள் உற்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...