‘பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களே மீண்டும் பதவியேற்பதால் நாடு மேலும் படுகுழியில்’: முஜிபுர் ரஹ்மான்

Date:

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு பிரதமர் தலைமையிலான குழுவொன்று நாட்டின் பொறுப்புக்களை ஏற்க முன்வந்தாலும், பழைய பழக்கங்களை உடைத்தவர்களே நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டு மக்களிடமிருந்தோ அல்லது சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கோ எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...

பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்

2025 க.பொ.த உயர்தர நடைமுறைப் பரீட்சைக்கான, பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான...