மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் ஆர்வம்!

Date:

கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதற்கமைய 163,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வைத்தியசாலையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு சில பரிசோதனைகளின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

இந்த இரசாயனங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதோடு இந்த உதவியின் நோக்கம், வரவிருக்கும் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இரசாயனப் பற்றாக்குறையை எளிதாக்குவதாகும்.

மேலும் 37,000 ரூபா பெறுமதியான மற்றொரு இரசாயணப் பொருட்களும் ஆய்வகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...