வௌிநாட்டு எண்ணெய்க் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.’

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முதல் சில மாதங்களுக்கு செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டு எரிபொருள் இருப்புக்களை சேமித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பங்களிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

LIOC  மற்றும் தெரிவு செய்யப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 1190 நிரப்பு நிலையங்கள் மற்றும் புதிய விற்பனை நிலையங்களை சிபெட்கோ வழங்கும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...