இந்தியாவின் அதானி குழுமத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

Date:

மன்னாரில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கோட்டா கோ கம’ என்ற அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றாலை மின் திட்டம் நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார் என்று ஜனாதிபதி கோட்டாபய  தனக்குத் தெரிவித்ததாக,இலங்கை மின்சார சபையின் தலைவர் சி பெர்டினாண்டோ, நாடாளுமன்றக் குழு முன்னால் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, 2022 ஜூன் 14 அன்று பதவி விலகினார்.

இந்தநிலையிலேயே இலங்கைக்கும் இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி முன்னால் ஆரம்பித்த பேரணி, மின்சார சபைக்கு முன் வந்த பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...