ஜனாதிபதி அலுவலகம் அருகே பதற்றமான நிலை: போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

Date:

இன்று காலை கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிசார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கொட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்ததன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, லோட்டஸ் சாலையை வாகன போக்குவரத்துக்கு திறந்துவிட்டனர்.

இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கலைந்து சென்றுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...