ஜம் இய்யத்துல் உலமா சபை தலைமை பொறுப்பை தொடர்வதாக றிஸ்வி முப்தி தீர்மானம்!

Date:

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.

புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (25) கொழும்பில் கூடியது.

இதன்போது இடம்பெற்ற பல்வேறு விதமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்

கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை கண்டி, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற உலமா சபையின் பொதுக் கூட்டத்தில் றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தலைமைப் பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிடம் ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார்.

கடந்த 20 வருட காலமாக ஒன்பது தடவைகள் இவர் உலமா சபையின்  தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் 2001 இல் உலமா சபையின் யாப்பு முறையாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.

என்றாலும் 2003 இல் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட இவர், 2004 இன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்திற்கும் தலைவராக தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

எனினும், கடந்த 2016இலும், 2019இலும் இவர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...