நிமல் மற்றும் அமரவீரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: சுதந்திரக் கட்சி

Date:

தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சிக்கு தெரிவிக்காமல் பதவியேற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோருக்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல் இவர்களுக்கும் கட்சிக்கு அறிவிக்காமல் பதவியேற்றதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு பிரிவினருக்கு வேறொருசட்டமும் இருக்க முடியாது கட்சியில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...