நிமல் மற்றும் அமரவீரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: சுதந்திரக் கட்சி

Date:

தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சிக்கு தெரிவிக்காமல் பதவியேற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோருக்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல் இவர்களுக்கும் கட்சிக்கு அறிவிக்காமல் பதவியேற்றதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு பிரிவினருக்கு வேறொருசட்டமும் இருக்க முடியாது கட்சியில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...