பொதுமக்களுக்கு ஒரே தீர்வாக இருந்த ரயில் பயணம்: ரயில் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

Date:

ரயில் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணங்களையும், 14 ஆண்டுகளாக திருத்தப்படாமல் இருந்த சரக்கு, தபால் மற்றும் இதர கட்டணங்களையும் திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொள்கைக்கு அமைவாக இலங்கை புகையிரத திணைக்களம் சலுகைக் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையினால் திணைக்களத்திற்கு ஏற்படுகின்ற நட்டங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்வைத்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...