லங்கா ஐ.ஓ.சி,டோக்கன் முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும்!

Date:

லங்கா- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த எரிபொருள் நிலையங்கள், டோக்கன் முறைமையின் மூலம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைப்பார்கள்.

எனவே வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும். டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையில், ‘அத்தியாவசியம்’ என்று அழைக்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...