வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் 5 வாரங்களுக்குள் பாராளுமன்றில் விவாதிக்கப்படும்!

Date:

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை வர்த்தமானி அறிவித்து ஐந்து வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் அதனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

இதேவேளை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என தான் நம்புவதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...