விவசாயத்துறை அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை ரத்து!

Date:

யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

கையிருப்பில் உள்ள உரங்களை விவசாய மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...