இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் முன்மொழியப்பட்டுள்ளார்!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசியப் பட்டியலில் இருந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலி பீரிஸை நியமிக்குமாறு முன்மொழிந்து மூன்று முன்னாள் ஆளுநர்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ரஜித் கீர்த்தி தென்கோன் மற்றும் அசாத் சாலி ஆகிய மூன்று முன்னாள் ஆளுநர்களினால் குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கட்சி சார்பற்ற சுதந்திரமான சாலிய பீரிஸை நியமிப்பதே பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச அடக்குமுறை அதிகரித்து நாடு ஆபத்தான நிலையில் இருந்த போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகளும் பெரும் பங்காற்றியதை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சாலிய பீரிஸை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்து, கட்சிகளையும் குழுக்களையும் பிரதமராக நியமிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு உண்மையான அர்த்தமுள்ள சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி, பொதுவான உடன்படிக்கைகளை உருவாக்க முடியும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...