எரிபொருள் விநியோகம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Date:

எரிபொருள் கொள்வனவு, விநியோகம், போன்றவற்றில் எந்தெந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் 14ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...