நாளை விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனம்!

Date:

நாளை (ஜூலை 25) விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து, இந்த விசேட டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு மணிநேரம் தமது வளாகங்களை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதனைக் கண்காணித்து உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...