இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் முன்மொழியப்பட்டுள்ளார்!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசியப் பட்டியலில் இருந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலி பீரிஸை நியமிக்குமாறு முன்மொழிந்து மூன்று முன்னாள் ஆளுநர்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ரஜித் கீர்த்தி தென்கோன் மற்றும் அசாத் சாலி ஆகிய மூன்று முன்னாள் ஆளுநர்களினால் குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கட்சி சார்பற்ற சுதந்திரமான சாலிய பீரிஸை நியமிப்பதே பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச அடக்குமுறை அதிகரித்து நாடு ஆபத்தான நிலையில் இருந்த போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகளும் பெரும் பங்காற்றியதை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சாலிய பீரிஸை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்து, கட்சிகளையும் குழுக்களையும் பிரதமராக நியமிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு உண்மையான அர்த்தமுள்ள சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி, பொதுவான உடன்படிக்கைகளை உருவாக்க முடியும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...