நாட்டுக்கு பணத்தை கொண்டு வரும் திட்டம் எதுவும் பிரதமரிடம் இல்லை: உடனடியாக பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக்க பெரேரா

Date:

மக்கள் போராட்டத்திற்கு தாம் ஆதரவளிப்பதாகவும், எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்கும் திட்டம் எதுவும் நிதி அமைச்சரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலர் நெருக்கடியுடன் தொடர்புடையது எனவும் நிதியமைச்சர் நண்பர்களிடம் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றும், டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன் பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் தம்மிக்க சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனால் நிதியமைச்சர் உடனடியாகக் கோரிக்கை விடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்றார்.

நிதியமைச்சரின் ஆலோசகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...