‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’: நுபுர் சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

Date:

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மா மீது எதிர்பலை கிளம்பியது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், நாடு முழுவதும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக்கி டெல்லியில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜுலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் சர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டுவிட்டதாக தெரிவித்தார்.

இதற்கு, “நுபுர் சர்மா மீண்டும் தொலைக்காட்சி முன் தோன்றி, நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதித்துறை தொடர்பான விஷயங்களை பேச நுபுர் சர்மாவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியினருக்கும் என்ன வேலை?” எனவும் உச்ச நீதிபதி சூரியகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவும் அசாதராண சுழல் அத்தனைக்கும், இந்த ஒற்றை பெண்மணியே (நுபுர் சர்மா) பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்.

மேலும், நுபுர் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்னர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...