அலரிமாளிகையில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருட்டு: ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு

Date:

அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையை ஆக்கிரமித்து வருவதால், அலரிமாளிகை வளாகத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை அறிய முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அலரிமாளிகையில் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பல சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...