இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு!

Date:

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவரது 05 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் சூரியவௌ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...