தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவரது 05 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் சூரியவௌ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.