‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!

Date:

கொழும்பு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கிராமம்’ போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அவசர சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தது.

போராட்டக்காரர்களை அடித்து உதைப்பது சட்டவிரோதமானதும் ஜனநாயகமற்றதுமான செயல் என்பதால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...