ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றம் ஜூலை 15ஆம் திகதி கூடவுள்ளது, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும், ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமைக்குள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...