புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்: பெருந்தொகை தேயிலை சேதம்!

Date:

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து.

தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ வீபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை.மேலும் மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.

இத் தீ விபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...