கொவிட், டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் அதிகரிப்பு :சுகாதாரத் துறையின் அறிவிப்பு

Date:

நாட்டில் மேலும் 06 கொரோனா மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 03 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று, புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 130 ஆக இருந்தது.

இந்த நாட்களில் கொரோனா, டெங்கு, இன்புளுவன்சா மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் பதிவாகி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், கொவிட் எதிர்ப்பு பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது முக்கியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நாட்களில், நாட்டில் இன்புளுவன்சா  மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் சாதாரணமானது, ஆனால் கொவிட்-19 பதிவாளர்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்களில் கொவிட்-19, டெங்கு, காய்ச்சல், மற்றும் பிற வைரஸ் தொற்றுகள் உள்ள நோயாளிகள் பலர் பதிவாகி வருவதாக அவர் கூறினார்.

1,000க்கும் குறைவான கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இன்னும் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகள் வீட்டு பராமரிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் பயங்கரமான காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிகமான நோயாளிகள் பதிவாகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் பரவும் நேரம் இது. மேலும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில், கொவிட் வைரஸுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்று டாக்டர் ஹேரத் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...