ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு!

Date:

தொழிற்சங்கவாதியும் ஆசிரியர் சங்கத்தலைவருமான ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சிறிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஸ்டாலினை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஸ்டாலினிடம் கூறினார்.

மேலும், முறைமை மாற்றத்தை வலியுறுத்தும் அரகலய உறுப்பினர்களை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தில் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உள்ளது, அதில் உள்ள நல்ல அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.

இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்படுவார் என எதிர்கட்சியான ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...