முச்சக்கர வண்டிகள் மீண்டும் வழமைக்கு திரும்பின !

Date:

QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி சேவைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் வரிசையில் தங்கியிருந்ததுடன், இதன் காரணமாக அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து முச்சக்கர வண்டிகள் அதிகம் பயன்படுத்தப்படும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஒரு முச்சக்கர வண்டியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகத்திற்கான கோட்டா முறை ஆரம்பிக்கப்பட்டதாலும், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ததாலும், அவர்கள் மீண்டும் முச்சக்கர வண்டி சேவைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...