இலங்கையின் முன்னேற்றம், ஜனாதிபதி ரணிலின் திறமையில் உள்ளது : எகிப்து ஜனாதிபதி நம்பிக்கை

Date:

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அப்தெல் ஃபாத்தா, குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் மேலும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதாக எகிப்திய ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...