நீர்கொழும்பு பாத்திமா ஷஹ்தா விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்!!

Date:

நீர்கொழும்பைச் சேர்ந்த பாத்திமா ஷஹ்தா என்பவர் விண்வெளி உயர் பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீர்கொழும்பு வீதி இஹல கொட்டராமுல்லை ஹாரூன் ஸஹீக்கா தம்பதிகளின் புதல்வியாவார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் றிழ்வான் ஹாஜியின் பேத்தியும் ஆவார்.

டுபாய் நாட்டில் வளர்ந்த பாத்திமா ஷஹ்தா கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை நீர்கொழும்பு செய்லான் இன்டர்நெஷனல் கல்லூரியில்  நிறைவு செய்துள்ளார்..

அதேநேரம்,விண்ணியல் துறைகளில் தொடர்பான உயர் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து மேலதிக கற்கை நெறிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய டுபாய் நாட்டுக்கு சென்ற பாத்திமா ஸஹ்தா அங்கிருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

விண்வெளி வீரர்களாக/ வீராங்கனைகளாக வர விரும்புவோர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் AERONAUTICS AND ASTRONAUTICS கற்கை நெறிக்கு விண்ணப்பித்தால் அது தொடர்பில் இலகுவாக அட்மிஷன் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தப் பல்கலைக்கழகம் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததும் ஆப்பிரகாம் லிங்கனின் மசோதா ஒன்றின் வழியாக ஆரம்பிக்கப்பட்டதுமான ஒரு பல்கலைக்கழகமாகும்.

அதே நேரம் விண்வெளித்துறை பாடநெறியின் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களைக் கவருவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் நாசாவின் சின்னம் பொறித்த சீருடையை வழங்கி மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் கவர்ந்து கொள்வதுடன், அதை ஒரு ஊக்குவிப்பு செயற்பாடாகவும் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....