ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இருவர் கைது!

Date:

ரீ – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி – மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து, ரீ-56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களில் ஒருவரது வீட்டிலிருந்து போலியான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 2 வாகன இலக்க தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கஹவத்தை மற்றும் எம்பிலிப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...